விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியை உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் பகுதியில், ஆரவாரம்பட்டி கம்பர் தெருவில் வசித்து வரும் தம்பதியினர் மணிகண்டன் – மாரீஸ்வரி. இவர்களுக்கு பரமேஸ்வரன் என்ற ஐந்து வயதுடைய மகனும், 1 1/3 வயதில், முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். நேற்று மாலை நேரத்தில் மாரீஸ்வரி துணிகளைக் காயப் போடுவதற்காக மாடிக்குச் சென்றுள்ளார்.
வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த முத்துலட்சுமி தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டை எட்டி பார்த்த போது தவறுதலாக அதன் உள்ளே தவறி விழுந்தார். இதனால், மூச்சு திணறல் ஏற்பட்டு முத்துலட்சுமி பரிதாபமாக இறந்து விட்டாள். இதனையடுத்து, துணி காயப்போட்டு விட்டு கீழே இறங்கி வந்து பார்த்த போது தனது குழந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை விட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…