Virudhunagar Flash News : விருதுநகர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பாக சிவகாசி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் ஓவிய பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தன்று ஓவிய பயிற்சி பட்டறை நடத்தவும், சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பாக சிவகாசி மாநகராட்சி அண்ணாவி தோட்டம் ஏ.வி. டி. உயர்நிலைப்பள்ளியில் நாளை 21ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை ஓவியபயிற்சி முகாம் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு மேல் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப் பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணைவருக்கும் பயிற்சி சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். இப்போட்டியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…