இளைய மகனின் திருமணத்தன்று தனது மூத்த மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய தந்தையை போலீசார் கைதுசெய்து இது கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்திவருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரின் இளையமகன் அரவிந்துக்கு அவர்களது உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது,இதனிடையே அனைவரும் திருமண மண்டபத்திற்கு சென்றுவிட்டனர். அப்போது வீட்டில் இருந்த அய்யாசாமியின் மூத்த மகன் மூவேந்தரன் தம்பியின் திருமணத்தை நடக்க விட மாட்டேன் என தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அனைவரும் திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மூவேந்தரன் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்துவந்து உடலை கைப்பற்றினர். அப்போது மூவேந்திரன் தந்தை தான் தனது மகனை கம்பியால் தாக்கிவிட்டு தூக்கில் தொங்க விட்டு கொலை செய்துள்ளார் என தொலைபேசியில் ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அய்யாசாமியை போலீசார் கைது செய்து இது கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…