திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழா ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை மெரினா கடற்கரை சாலையில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து திருவள்ளுவர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி நிதியுதவி வழங்கினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…