உடுமலை நகராட்சியின் 33வது வார்களில் சில நாட்களாகவே நூற்றுக்கணக்கான தெருநாய்கள் அங்கும் இங்குமாக சுற்றி தெரிந்து வருகின்றன.
இரவு பகல் என எந்நேரமும் சாலையில் இவை ஓடி கொண்டு இருப்பதால் சில சமயம் விபத்துகளும் நடக்கின்றது. இதற்கு காரணமாக பார்க்கப் போனால் ஓட்டல், இறைச்சி கடைகளிலிருந்து வீசப்படும் உணவு மற்றும் இறைச்சி கழிவுகளாக இருக்க வேண்டும். குப்பை தொட்டியை சுற்றி வரும் நாய்கள் நகரத்தில் அசுத்தம் செய்வதாக மக்கள் குமுறுகின்றனர்.
மேலும், குடியிருப்பு பகுதி மற்றும் பிரதான சாலையில் திரிந்து பொதுமக்களுக்கு பெரும் அவதியாக இருக்கும் இந்த தெருநாய்கலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…