Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

10 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம்.. கல்குவாரியில் சடலமாக மீட்பு!!

Sekar October 16, 2022 & 15:22 [IST]
10 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம்.. கல்குவாரியில் சடலமாக மீட்பு!!Representative Image.

திருப்பூரில் 10 ஆம் வகுப்பு மாணவி கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த ரமேஷ்குமார்-சந்தியா தேவி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் காயத்ரி (வயது 16) அவினாசியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த மாணவிக்கு அங்குள்ள ஆண்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில்,பெற்றோர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர். மேலும் காயத்ரியை அவரது பெற்றோர் அவினாசி பள்ளியில் இருந்து மாற்றி, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் சேர்த்துள்ளனர். இதையடுத்து மாணவி காயத்ரி விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். 

இதையும் படிங்க : அஜித்தின் ரீல் மகளா இது? வேற லெவல் போஸ் கொடுக்குறாரே..!

கடந்த 12 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற காயத்ரி, அங்கிருந்து விடுதிக்கு செல்லவில்லை. இது குறித்து தகவல் கிடைத்த நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் காயத்ரியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகாரளிக்கப்பட்டது. 

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று காலை திருப்பூர் அம்மாபாளையம் எஸ்.ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் பாறைக் குழியில் பள்ளி சீருடை அணிந்த நிலையில் மாணவி ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போலீசார் அங்கு இறந்து கிடப்பது காயத்ரி தான் என்பதை கண்டறிந்துள்ளனர். எனினும் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் பரமேஷ், பிரேம் மற்றும் மாணவி ஒருவருடன் காயத்ரி வெளியே சென்றுள்ளது தெரியவந்தது. 

இதையடுத்து பெற்றோர் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா உள்ளது காதல் விவகாரத்தில் மாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காயத்ரி கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க : நிதி அகர்வாலின் தாராள மனம்...! வேற லெவலுக்கு கவர்ச்சி காட்டும் நடிகை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்