Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Erode flash news : ஈரோட்டில் கார் மோதி பெண் படுகாயம்..?

Muthu Kumar June 06, 2022 & 15:29 [IST]
Erode flash news : ஈரோட்டில் கார் மோதி பெண் படுகாயம்..? Representative Image.

Erode flash news : ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த அரியான் காடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் இவரது கூட்டாளிகள் 4 பேருக்கும் அரியான் காடு பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இவர்கள் கரும்பு பயிர் செய்து வந்துள்ளனர்.

கரும்பு தோட்டத்தில் பரவிய தீ

இந்நிலையில், நேற்று மாலை காற்று அதிகமாக வீசியதால் தோட்டத்தின் மேல் செல்லும் மின்கம்பி உராய்வு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த உராய்வு காரணமாக வந்த தீப்பொறிகள் கரும்பு பயிரின் மீது விழுந்துள்ளதால் கரும்பு தோட்டத்தில் ஒரு பகுதியில் தீ பற்றி எரிய தொடங்கியது. 

தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு படை

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சில மணி நேர போரட்டத்திற்க்கு பின் தீயை அணைத்தனர்.

கார் கவிழ்ந்து விபத்து

இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கொண்டிருந்த போது, ஒரு சிலர் ஓடிவந்து தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரனிடம் கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர். மேலும்  அந்த கார் ஒரு பெண்ணின் மீது மோதியுள்ளதால் அவரது உயிரை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.

மீட்ட தீயணைப்பு வீரர்கள்

இந்த தகவல் கிடத்த உடனடியாக விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கவிழ்ந்து கிடந்த காரிலிருந்து அனைவரையும் மீட்டனர். மேலும் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை

மேலும், இந்த விபத்தில் கார் மோதிய  படுகாயம் அடைந்த சித்தூர் பகுதியை சேர்ந்த பெண் சின்னம்மாவை தீயணைப்பு வீரர்கள் மீட்டு தீயணைப்பு வாகனத்தி லேயே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் சின்னம்மா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு 

மேலும், இது குறித்து தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் காவல்நிலைய காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்