சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதனை பார்க்கும் நெஞ்சை கதிகலங்க வைக்கிறது.
தொட்டில் பட்டியை சேர்ந்த ரகுநாதன் என்பவருக்கும் அப்பகுதியில் இருக்கும் சிலருக்கும் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் காயமடைந்த ரகுநாதன் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். அவரைப் பின் தொடர்ந்து வந்த கும்பல் மருத்துவமனையிலையே அத்தனை மக்கள் இருக்கும் இடத்தில் ரகுவை சரமாரியாக வெட்டி, கழுத்தை அறுத்து கொன்றுவிட்டனர். பிறகு விஷயம் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்த கொலைக்கு சம்மந்தப்பட்ட 4 பேரை கைது செய்தனர். அதில் வெள்ளையன், மூர்த்தி இருவருக்கும் போலீஸ் கிட்ட இருந்து தப்பித்து ஓடும் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…