சமீப காலமாக, யூடியூபர் டிடிஎஃப் வாசன் என்பவர், மிக அதிக வேகத்தில் பைக் ஓட்டுவதுடன், பைக் சாகசங்களைச் செய்து, அதனை வீடியோவாக வெளியிட்டு வருவது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.
சமூக வலைதளங்களில் இவர் அனுப்பப்படும் வீடியோக்கள், வருங்கால சந்ததியினர் இதனையே பின்பற்றுவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், டிக்டாக் பிரபலமான ஜிபி முத்துவை பைக்கில் அழைத்து சென்று அதனை வீடியோகவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவில், அவர் பைக்கை 150 கிலோமீட்டர் வேகத்தில் சென்றவாறு பதிவாகி இருந்தது. மேலும், ஆபத்தை விளைவிக்கும் வகையில் இவர் பைக் ஓட்டியதாகவும் கூறி, டிடிஎஃப் வாசன் மீது சூலூர் மற்றும் போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வாறு வழக்குப் பதிவு செய்த பின்னரரும், என் கிட்ட மோத வேண்டாம் என எச்சரிக்கும் வகையிலான வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் இவரைக் கைது செய்துள்ளனர். இவர் பெங்களூருக்கு தப்பித்துச் செல்ல முயன்றதாகவும், இவரை சூலூர் போலீஸ் மடக்கிப் பிடித்துக் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், காவல் துறையினர் இவரை பிணையில் வைத்து, பின்னர் விடுவித்துள்ளனர். கைதாகி விடுதலையான பின் பேட்டியளித்த இவர், நான் செய்தது தப்பு தான் எனக் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…