துணிவு படத்தைப் பார்த்துவிட்டு இது மக்களுக்கு விழிப்புணர்வு தரும் படம் என புகழ்ந்துள்ளார் பிரபல இயக்குநர் ஒருவர்
அஜித்குமார் நடிப்பில் அ. வினோத் இயக்கியுள்ள திரைப்படம் துணிவு. பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 11ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தை பார்த்த பலரும் படத்தின் கரு குறித்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வங்கியைக் கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவனாக அறிமுகமாகும் அஜித்குமார், எதற்காக இப்படி கொள்ளையடிக்கிறார், எவ்வளவு பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் அதை என்ன செய்தார்கள் என்பவைதான் கதையாக இருக்கும் என நினைத்திருந்தவர்களுக்கு படத்தின் கதை மிகவும் பிடித்திருநத்து. கொஞ்சம் குழப்பமான விசயம்தான் என்றாலும் அதை மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக சொன்ன விதம் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், பணம் பற்றியும் சேமிப்பு பற்றியும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது துணிவு படம் என பிரபல இயக்குநரான பொன்ராம் கூறியுள்ளார். சீமராஜா, ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். சமீபத்தில் இவரது இயக்கத்தில் டிஎஸ்பி எனும் படம் வெளியாகியிருந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…