அஜித், விஜய் சேர்ந்து நடித்த ஒரே படமான ராஜாவின் பார்வையிலே படம் இன்று மீண்டும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படம் குறித்து ஒரு சிறு பார்வை.
கதை
ராஜா ஒரு ஏழை குடும்பத்து இளைஞன். நன்கு படித்தால் கஷ்டங்கள் நீங்கிவிடும் நல்ல வேலை கிடைத்தால் சம்பாத்யம் உயர்ந்து குடும்ப கஷ்டம் குறையும் என அதை நோக்கியே ஓடும் ஒரு குடும்பம்.
கௌரி எனும் பணக்கார குடும்பத்து இளம்பெண் ராஜாவைப் பார்த்து காதலில் விழுகிறாள். அவனை எப்படியாவது அடைய வேண்டும் என உறுதியாக இருக்கிறாள். ஆனால் ராஜாவோ அவளைக் கண்டு ஓடுகிறான். விலகி நிற்கிறான். எதனால் இப்படி செய்கிறான் ராஜாவுக்கு ஏன் தன்னை பிடிக்கவில்லை என்பது தனக்கு நிச்சயம் தெரிய வேண்டும் என நினைக்கிறாள் கௌரி.
ராஜா தன்னுடைய நண்பன் சந்துருவின் கதையைக் கூறுகிறான். அவன் சாந்தி எனும் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறான். ஆனால் இந்த காதல் சக்ஸஸ் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த சந்துரு மரணத்தைத் தேடிக் கொண்டான். அதிலிருந்து இவன் காதலை வெறுக்கிறான். காதல் என்றாலே மரணத்தில் முடியும் என நினைக்கிறான். அதன்பிறகு ஒரு கட்டத்தில் ராஜாவுக்கு கௌரியை பிடித்துப் போக அவர்கள் காதலிக்கிறார்கள். இந்த விசயம் கிராமத்துக்கு தெரிய அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனை எதிர் கொண்டு ராஜா - கௌரி இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை.
ராஜா கதாபாத்திரத்தில் விஜய்யும், சந்துரு கதாபாத்திரத்தில் அஜித்தும் நடித்திருப்பார்கள். இந்திரஜா கௌரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அஜித் காதலிக்கும் பெண்ணாக காயத்ரி நடித்திருப்பார். இவர் ரோஜா சீரியலில் வரும் மருமகள் கேரக்டர்.
வடிவேலு, கனகராஜ், வடிவுகரசி, சத்யப்பிரியா, சாருஹாசன், குமரிமுத்து உள்ளிட்ட இன்னும் பலர் நடித்திருந்த இந்த படம் கடந்த 1995ம் ஆண்டு வெளியானது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…