வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் உடல் நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி கிங்காக வலம் வருபவர் வடிவேலு. மதுரையைச் சேர்ந்த வடிவேலு சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் தங்கியிருந்தாலும், அவரது குடும்பத்தினர் இன்னமும் மதுரையில் தான் வசித்து வருகின்றனர்.
வடிவேலுவின் தாயார் சரோஜினி என்கிற பாப்பா மதுரை விரகானூரில் வசித்து வந்தார். 87 வயதான அவருக்கு நேற்று இரவு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…