அஞ்சலி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள FALL படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் அஞ்சலியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு திடீரென கோபப்பட்ட அஞ்சலி அதை வெளிக்காட்டாமல் அமைதியாக பதில் கூறியுள்ளார்.
ஜெய்யுடனான காதல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய அஞ்சலி தனக்கு சினிமாவில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப் பற்றி எழுதுபவர்களுக்கு அந்தந்த நேரத்தில் யாரை இணைத்து எழுத வேண்டும் என விருப்பம் இருக்கிறதோ அவர்களை இணைத்து எழுதுவார்கள். நான் காதலிக்கிறேன் என்று எப்போது சொன்னேன். எழுதுபவர்கள் எழுதிக் கொண்டே இருப்பார்கள். அதைப் பற்றி நான் கவலைப்பட்டதும் இல்லை பேசப்போவதும் இல்லை என கூறியுள்ளார்.
அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, பிரசன்னா - சினேகா போல ஜெய் - அஞ்சலி ஜோடியும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இருவரும் இணைந்து சில படங்களில் நடித்தார்கள். தன் படத்தில் ஜெய்க்கு வாய்ப்பு வழங்கு பரிந்துரைத்ததாகவும் சில செய்திகள் வெளியாகியிருந்தன.
பின்னாளில் ஜெய்க்கும் அஞ்சலிக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் பல நாளிதல்களில் செய்திகள் பரவின.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…