பாபா படத்தின் மூலம் சம்பாதித்த ஒரு பைசா கூட தன்னிடம் இல்லை என ரஜினிகாந்தே கூறியுள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மிகப் பெரிய கொண்டாட்டங்களுக்கு மத்தியில், படம் வெளியாகிறது. ரஜினி ரசிகர்கள் தங்கள் சொந்த காசுகளைப் போட்டு திரையரங்குகளில் வான வேடிக்கை, மலர் அலங்காரம், மிகப் பெரிய அளவிலான பேனர்கள் என படு ஜோராக படத்தை வரவேற்க காத்திருந்தனர்.
படம் வெளியான முதல் காட்சியிலேயே படம் படுதோல்வியடைந்தது. முதல் காட்சியைப் பார்த்த பலர் பாதியிலேயே வெளியேறி படத்தைக் கழுவி ஊற்றினர்.
ரஜினி ரசிகர்களே தலைவா ஏமாற்றிவிட்டீரே தலைவா என கண்ணீர் வடித்து அழுது புரண்ட கதை கூட உண்டு. மதுரையில் மட்டுமே இரண்டாவது வாரம் வரை திரையிட பட்டதாக கூறுகிறார்கள். அதுவும் பத்து பேர் கூட வராத அந்த படத்தை வேறு வழியின்றி திரையிட்டதாகவும் கூறுவார்கள்.
அப்போதெல்லாம் நல்ல வேளை ஊடகமும் சமூக வலைத்தளங்களும் இவ்வளவு வளர்ச்சி அடையவில்லை. இப்போது மீண்டும் பாபா ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ள பாபா படத்துக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…