Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பாரதிக்கு தெரிய வந்த உண்மை...விட்டான் ஒரு அறை...இனிமே வெண்பா சாஃப்டர் க்ளோஸ்!

Priyanka Hochumin November 02, 2022 & 14:15 [IST]
பாரதிக்கு தெரிய வந்த உண்மை...விட்டான் ஒரு அறை...இனிமே வெண்பா சாஃப்டர் க்ளோஸ்!Representative Image.

Bharathi Kannama Today Episode Tamil: வெண்பாவை திருமணம் செய்ய வந்த பாரதியே அவளை பளார்னு அறை விட்ட பரபரப்பு திருப்பங்களுடன் இன்றைய எபிசோடு.

பாரதிக்கு தெரிய வந்த உண்மை...விட்டான் ஒரு அறை...இனிமே வெண்பா சாஃப்டர் க்ளோஸ்!Representative Image

வெண்பா பாரதியை கல்யாணம் செய்ய போற விஷயம் தெரிஞ்சு எப்படியோ கண்ணம்மா எல்லாரும் கோவிலுக்கு வராங்க. வந்து கண்ணம்மா பாரதிய மானக்கேடா திட்டுறா, தாலி கட்டுன நான் ஒருத்தி உயிரோட இருக்கும் போதே எப்படி இன்னொருத்தியை கல்யாணம் பண்ண எப்படி முடிவு செஞ்சன்னு திட்டுகிறாள். அப்புறம் பாரதியோட அம்மா, அப்பா, தம்பி அகில்னு எல்லாரும் மனவருத்தத்தோடு பாரதிய திட்டுறாங்க. இருந்தாலும் சௌந்தர்யாவுக்கு ஒரு சந்தேகம் இருந்துட்டு இருந்துச்சு. பாரதி எது பண்ணாலும் நல்லா யோசிச்சு தான் பன்னிருப்பான், இந்த கல்யாணத்தை பண்ண எதுக்கு ஒத்துக்கிட்டன்னு மாத்தி மாத்தி கேக்குறாங்க.

பாரதிக்கு தெரிய வந்த உண்மை...விட்டான் ஒரு அறை...இனிமே வெண்பா சாஃப்டர் க்ளோஸ்!Representative Image

அந்த பக்கம் வெண்பாவோ எங்க நம்ப சொன்ன பொய் வெளிய வந்திருமோன்னு பீதில இருக்காங்க. அப்ப தான் பாரதி வெண்பா கர்பமா இருகன்குற உண்மைய எல்லாத்துக்கிட்டையும் சொல்றான். எல்லாத்துக்கும் செம்ம ஷாக்! ஆனா இதை விட பாரதி ஒரு மேட்டர் சொன்னாரு பாருங்க அது தான் ஹைலைட். வெண்பா யாருடைய குழந்தையை வயித்துல சுமந்திட்டு இருக்கான்னு தெரிலன்னு சொன்னா. அந்த குழந்தைக்கு இந்த சமுதாயத்துல கிடைக்க வேண்டிய எல்லா உரிமையும் கிடைக்கும்னு தான் நான் அவள கல்யாணம் பண்ண சம்மதிச்சேன்னு சொல்றாரு.

பாரதிக்கு தெரிய வந்த உண்மை...விட்டான் ஒரு அறை...இனிமே வெண்பா சாஃப்டர் க்ளோஸ்!Representative Image

அதை கேட்டு கடுப்பான கண்ணம்மா, ஏன்டா! உனக்கு பொறந்த புள்ளைங்கள ஏத்துக்க துப்பில்ல, இதுல எவனோ ஒருத்தனுக்கு பொறக்க போற குழந்தைக்கு உரிமை கிடைக்கும்னு கல்யாணம் பண்ணிக்க போறியா? வெக்கமா இல்லன்னு போட்டு தாக்கிட்டாங்க கண்ணம்மா. அப்புறம் எல்லாம் வெண்பா பக்கம் திரும்பி யாருடைய குழந்தை அது? கேள்வி கேக்குறாங்க. கடைசில ரோஹித் எல்லா உண்மையையும் சொல்றான். நான் அந்த குழந்தைக்கு அப்பா, நிச்சியதார்தம் நடந்த அன்னைக்கு நாங்க சுயநினைவுல இல்லாத நேரத்துல அப்படி ஒரு தப்பு பண்ணிட்டோம், இந்த விஷயம் வெண்பாவுக்கும் தெரியும்னு சொல்லிட்டான்.

பாரதிக்கு தெரிய வந்த உண்மை...விட்டான் ஒரு அறை...இனிமே வெண்பா சாஃப்டர் க்ளோஸ்!Representative Image

அப்ப என்னைய ஏமாத்தி தான் கல்யாணம் பண்ண பிளாக்மெயில் பண்ணியானு பளார்னு வெண்பாவை ஒரு அறை விட்டாரு பாருங்க செம்ம ஃபன் போங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்