பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் அனைவரும் கதை சொல்லும் டாஸ்க் வைத்திருக்கிறார்கள். பிக்பாஸ் இந்த கதைகளை கேட்கிறார். அவருடன் சேர்ந்து மக்களும் கேட்கிறார்கள். ஒவ்வொருவராக கதை சொல்வது அதை பிடிக்காதவர்கள், அவர் பேசுவதில் உண்மை இல்லை என்பவர்கள் பிக்பாஸ் வீட்டு அறையிலுள்ள பஸரை அழுத்தி அவரை வெளியேற்றலாம். குறைந்த பட்சம் 3 பேர் பஸரை அழுத்திவிட்டால் கதை சொல்பவர் கதையை நிறுத்திவிட்டு வெளியேறிவிடவேண்டும்.
யார் முழுமையாக கதை சொல்லி முடிக்கிறார்களோ அவர்களுக்கே அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். இந்த வகையில் அஸீம் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது, ரச்சிதா, மகேஷ்வரி, சாந்தி ஆகியோர் அடுத்தடுத்து பஸரை அழுத்தி அவரை வெளியேற்றுகின்றனர். என்ன காரணம் என்பது பிக்பாஸ் எபிசோட் பார்க்கும்போதுதான் புரிய வரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…