இயக்குநர் செய்த செயலால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் விஜய். இதனால் மிகப் பெரிய பிரச்னை வெடிக்கும் என படப்பிடிப்பு வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் தளபதி விஜய். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடாததால் தளபதி 67 என்றே அழைத்து வருகிறார்கள். இந்த படத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா நடிகர்களும் இணைந்து நடிக்கிறார்களாம்.
மிக முக்கியமாக இயக்குநர்கள் கௌதம் மேனன், மிஷ்கின் இருவரும் நடித்து வருகின்றனர். மிஷ்கின்தான் விஜய்யை டென்சன் ஆக்கியிருக்கிறார்.
படப்பிடிப்பில் நடந்து வரும் முக்கியமான விசயங்களை வெளியில் சொல்லி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் மிஷ்கின். தனக்கும் விஜய்யும் சண்டைக்காட்சி இருப்பதாகவும், ரத்தக்களறியுடன் முகமெல்லாம் சிவப்பாக மாறிவிட்டதாகவும் கூறி பொதுவெளியில் பேசியிருக்கிறார். இது விஜய் காதுக்கு சென்றிருப்பதால் எந்த நேரத்திலும் விஜய், மிஷ்கினிடம் இதுகுறித்து பேசலாம் என கூறப்படுகிறது. அப்படி பேசும்பட்சத்தில் மிஷ்கின் ஏதார்த்தமாக பேசுகிறேன் என பேசி விஜய்யின் கோபத்துக்கு ஆளாகிவிடுவாரோ என படப்பிடிப்பில் கலந்துகொண்டவர்கள் பேசி வருகின்றனராம்.
மூத்த இயக்குநரான மிஷ்கினுக்கு இது எல்லாம் தெரிந்திருக்க வேண்டாமா. படப்பிடிப்பில் நடக்கும் விசயங்களை வெளியில் சொல்லலாம். அவற்றை வியாபார நோக்கில் இன்ப அதிர்ச்சியாக மக்களுக்கு அறிவித்தால் எப்படி இருக்கும். முக்கியமாக விஜய் படங்களில் இந்த கணக்கு இருக்குமல்லவா. மிஷ்கினுக்கு அவர் வாய் தான் எதிரி என்பது பொய்யில்லை போலிருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…