Eeramana Rojave Today Episode Tamil: உங்க கூட என்னால சந்தோசமா வாழ முடில, இத்தனை நாளா சந்தோசமா இருக்குற மாறி நடிச்சிகிட்டு இருந்தேன்னு ஜீவா சொன்ன அந்த ஒரு வார்த்தையால பிரியா உடைஞ்சு போய்ட்டா.
ஜீவா அப்படி சொன்னதுல இருந்து பிரியா அழுது அழுது தேஞ்சி போய்ட்டாங்க. அப்புறம் கோவில்ல பிரியா அவளோட அம்மா மஹா கிட்ட இதையெல்லாம் சொல்லி அழுகுறாள். எனக்கு வாழவே புடிக்கல, செத்து போய்டலாம்னு சொன்னத கேட்டுட்டு பதறி போன மஹா நேரா ஜீவா கிட்ட போய் எல்லா உண்மையையும் சொல்றாங்க. அப்புறம் ஜீவா கால பிடிச்சு கதறுறாங்க, நீங்கள் பிரியா கூட சந்தோசமா வாழனும், இல்லைனா உங்க நாலு பேரோட வாழ்க்கையும் நாசமா போயிடும்ன்னு அழுகுறாங்க. கடைசில ஜீவா நீங்க எதுக்கும் கவல் படாதீங்க, பிரியா கூட சந்தோசமா இருப்பேன்னு சொல்ராங்க. இதை ஜேகே தூரத்துல இருந்து பாக்குறான்.
இன்னைக்கு ஜீவா கிட்ட வந்து நடந்ததை சொல்லி வெறுப்பேத்துறான். ஜீவாவுக்கு இருக்குற பயம், எல்லாத்தையும் கேட்டுட்டானா என்பது தான். ஆனா அவனுக்கு எதுவும் தெரியாததுனால நிம்மதியா அங்க இருந்து கெளம்பிட்டான். அடுத்த நாள் ஆடி மாசம் என்பதால் பிரியா, காவ்யா ரெண்டு பேத்தையும் பொறந்த வீட்டுக்கு கூட்டிட்டு போக மஹா வராங்க. இங்க பார்த்திபனை விட்டு பிரிய மனசில்லாம காவ்யா தவிக்கிறாள். அங்க பிரியா ஜீவாவை விட்டு போறது தான் சரின்னு முடிவெடுக்கிறாள். ஜீவா பிரியா கூட வாழ ஆசைப்படுறான்.
அவர்கள அனுப்பி வைக்கும் போது காவ்யாவ கூப்பிட்டு இனிமே நீ இங்க வரவே கூடாதுன்னு பார்வதி சொல்றாங்க. ரொம்ப சோகத்தோடு காவ்யா கெளம்புறாள், பிரியாவோ அங்க இருந்து கிளம்புற வரைக்கும் ஜீவா முகத்தை கூட பாக்கல. ஜீவா ரொம்ப ஏக்கத்தோட ஒரு தடவையாவது என்னைய பாருங்கன்னு மனசுல நினைச்சு பீல் பண்றாரு. ஒரு வழியா ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க, பார்த்திபன் காவ்யாவை நினைச்சு அழுகுறான். பொறந்த வீட்டுக்கு போன காவ்யா, பிரியா திரும்ப ஜீவா, பார்த்திபன் கூட சேர்வாங்களா காத்திருப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…