Eeramana Rojave 2 Today Episode: இந்த வாரம் ஈரமான ரோஜாவே 2 இல் காவ்யா மீது இருக்கும் அளவு கடந்த காதலால் பல சில்மிஷ்யங்களை செய்யும் பார்த்திபன். காவ்யா பார்த்திபன் இன்றைக்கு செய்யும் லூட்டிகளைப் பற்றி பார்க்கலாம்.
ஆடி மாசம் புது மன தம்பதிகள் ஒன்றாக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்த பெரியவர்கள், காவ்யா பிரியா இருவரையும் பொறந்த வீட்டிற்கு அனுப்பினர். அவர்கள் கிளம்பி கொஞ்ச நேரம் கூட இல்ல, பார்த்திபன் காவ்யாவை ரொம்பவே மிஸ் பன்றாங்க. அத ஜீவா கிட்ட சொல்லி அவனை கடுப்பேத்துறான் பார்த்தி. காவ்யா இல்லாத இந்த வீட்ல என்னால இருக்கவே முடில. அவ என் கூட சண்டை போடறது, அதற்றதுன்னு ஒரு மாறி நல்லா இருக்கும். இப்ப அதெல்லாம் இல்லாம நல்லாவே இல்லடா.
இவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு, சரி பார்த்தி எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்னு கிளம்புறான். ஆனா விடா பிடியா இழுத்து புடிச்சு பார்த்தி ஒரு ஐடியா சொல்றான். நாம ரெண்டு பேரும் இன்னைக்கு நைட் யாருக்கும் தெரியாம அவங்கள பாக்க போலாமா? ஐயோ யாராவது பாத்துட்டா வம்பு நான் வரலன்னு ஜீவா எஸ்கேப் ஆகுறான். யாரும் வேணாம் நானே பாத்துக்குறேன்னு பார்த்தி செம்மையா ரெடி ஆகி ஜீவா கிட்ட சொல்லிட்டு கேம்ப வரான்.
அப்ப ஜீவா, டேய் பார்த்தி வேணாம் சொன்னா கேளு போகாத! ஆனா பார்த்தி நான் யாருக்கும் தெரியாம செவுரு ஏறி குதிச்சி தான போக போறேன் யாரும் பாக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டு போறான். அங்க காவ்யா டிவில லவ் சாங்ஸ் கேட்டுட்டு பார்த்தி போட்டோவ வச்சி பேசிட்டு இருக்கா. அதை பார்த்து ரசிச்சிட்டு இருந்த பார்த்தி கால் தடுக்கி உள்ளே வர, பயந்த காவ்யா ஐயோ அம்மானு கத்த! சக்தி வந்து என்னகா கதவ திறன்னு சொல்லி அப்புறம் அவள சமாளிச்சு ரெண்டு பேரும் பேசுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.
ஆனா இன்னைக்கு ஒரு மாறி பாக்க ஜாலியா நல்லா இருந்துச்சு. அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்க டெய்லி எங்க சமூக வலைத்தள பக்கத்தை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…