பிரபல இந்தி நடிகையாக நடித்த ராக்கி சாவந்த் முத்திரை, கம்பீரம் போன்ற தமிழ் திரைப்படங்களில் பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
இவர், கடந்த ஆண்டு அதில் துரானி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சில நாள்களுக்கு முன்பு, அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு வைத்தார். இதனால், மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் தெரிவித்திருந்தார்.
அதாவது துரானி அடித்தார் என்றும், தனது முகத்தில் திராவகம் வீசி விடுவேன் எனவும், சாலை விபத்து ஏற்படுத்தி கொன்று விடுவேன் என்றும் கணவர் மிரட்டியதாகவும் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அதில் துரானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ராக்கி சாவந்த் தன்னை நிர்வாணமாக போட்டோ எடுத்து அதில் துரானி பணத்திற்காக விற்று விட்டதாக பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…