கேஜிஎஃப் 3 படத்தின் அப்டேட் குறித்த தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், படத்தின் ஹீரோ யாஷ் அது குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் திரைப்படம், யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உச்சத்தை தொட்ட வெற்றியை அடைந்தது. அதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறே அடுத்த இரண்டாம் பாகமும் வெற்றியைத் தந்தது.
இதனிடையே கேஜிஎஃப் 3 படத்தின் மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில், கேஜிஎஃப் 3 பாகத்திற்கான ஷூட்டிங தொடங்குமா என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் இருந்து வந்தது.
இதற்கு கேஜிஎஃப் படத்தின் ஹீரோ யாஷ் பதிலளித்துள்ளார். அதாவது,”எனது அடுத்த படம் கேஜிஎஃப் 4 ஆம் பாகம் அல்ல. இப்போதைக்கு உடனடியாக கேஜிஎஃப் 3 பாகம் தொடங்காது. எனது அடுத்த படம் குறித்து வெளிவரக்கூடிய வதந்திகளிய யாரும் நம்பாதீர்கள். நான் கொஞ்சம் வித்தியாசமான படத்தில் நடிக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…