நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம், மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மஞ்சிமா மோகன் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட தகவல் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர்கள் திருமணமான உடனே பல நாடுகளுக்கும் இன்ப சுற்றுலாவாக தேனிலவு செல்ல முடிவு செய்திருந்தனராம். ஆனால் திடீரென இந்த திட்டத்தை கேன்சல் செய்துள்ளார் மஞ்சிமா. இதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது.
நெருங்கி உறவுமுறைகள், நண்பர்கள் புடை சூழ இவர்களது திருமணம் நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டிய மற்றவர்களை இவர்கள் திருமணமத்துக்கு அழைக்கவில்லை. மேலும் கௌதம் தனது தந்தையின் நண்பர்களைக் கூட அழைக்க வில்லை என வருத்தத்தில் இருக்கிறார் கார்த்திக்.
திருமண மேடையில், சிலர் மஞ்சிமா மோகனை பார்த்து உருவ கேலி செய்துள்ளனர். இதை நேரடியாகவே பார்த்துள்ள மஞ்சிமா. இதனை கௌதம் கார்த்திக்கிடமும் கூறியுள்ளனர். அவரும் இந்த விசயத்தில் மனமுடைந்து காணப்படுகிறார். நெருங்கிய உறவினர்களே இப்படி இருக்கிறார்களே என வருத்தப்பட்டுள்ளார்.
தனது கணவரின் வருத்தத்தை பார்த்து தான் உடல் எடை குறைவது குறித்து தீரமான முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் உடல் எடை குறைப்பதற்கான வழிகளை மேற்கொள்ள இருப்பதாகவும், கோடைக்குள் உடல் எடை குறைந்து பின் தேனிலவு செல்லலாம் என முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இனிமேல் அடிக்கடி மஞ்சிமா உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்கும் போல..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…