மும்பையில் கடந்த வியாழக்கிழமை அந்தேரி பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் இருந்து 30 வயது மாடல் அழகியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அறையில் இருந்து தற்கொலைக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டது.
தற்கொலை செய்துகொண்டவர் 30 வயதான மாடல் மற்றும் டிவி நடிகையான அகன்ஷா மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை இரவு 8 மணியளவில் ஹோட்டலில் அறை எடுத்ததாகக் கூறப்படுகிறது. மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளதகா போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மாடலின் அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், “என்னை மன்னிக்கவும். இதற்கு யாரும் பொறுப்பல்ல. நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி மட்டுமே தேவை." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் தற்கொலையின் பின் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…