நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் திடீரென இந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது திருப்பதியில் நடக்கவிருப்பதாக இருந்த திருமணம் அதே தேதியில் மகாபலிபுரத்தில் நடக்கிறதாம். அதை உறுதி செய்யும் விதமாக அவர்களது திருமண அழைப்பிதழும் சமூக வலைத் தளங்களில் வைரலானது.
மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு 5 நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெறுகிறது. காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் முகூர்த்தம் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தத்துக்கு யாரையும் அழைக்காத நிலையில், திருமணத்துக்கு வெறும் 200 பேரை மட்டுமே அழைத்துள்ளனராம். மிக மிக நெருக்கமானவர்கள் மட்டுமே இதில் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமான நடிகர்கள் விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லீ, நெல்சன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…