பிக்பாஸ் தமிழ் சீசன் 6ல் இளம் பாடகராக கலந்து கொண்டவர் அசல் கோளாறு. இவர் பிக்பாஸ் வீட்டில் சில கோளாறு செய்ததால் அப்படியே கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிவிட்டனர் நேயர்கள். இவருக்கு ஓட்டு போடாமல் விட்டதால் கடந்த வாரம் வெளியேறிவிட்டார். இந்நிலையில் இவருக்காக இவரது நெருங்கிய தோழி நிவாஷினி செய்த விசயங்களைப் பார்த்து பிக்பாஸ் ரசிகர்கள் உச் கொட்டுகின்றனர்.
அசல் வெளியேறியதிலிருந்து அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார் நிவாஷினி. வேறு யாரையும் வெளியில் அனுப்பியிருக்கலாமே அசலைத் தான் வெளியே அனுப்பனுமா. இங்க எத்தன பேர் இருக்காங்க என புலம்பிக்கொண்டிருக்கிறார். சாப்பிட முடியலயாம், தூங்க முடியலயாம் மறக்க முடியலயாம். ஏதோ காதலனை விட்டு பிரிந்த காதலி போல புலம்புகிறார்.
அசலின் சட்டையை அவரது நியாபகமாக எடுத்து வைத்திருக்கிறார் நிவாஷினி. அதை போர்த்தி படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…