Pandian Stores today episode: தன்னுடைய மனைவியின் சிகிச்சைக்காக செலவழித்த பணத்தை திருப்பி கொடுக்காமல் வீட்டிற்குள் நுழைய மாட்டேன் என்று கதிர் எடுத்த சபதத்தில் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்று நீங்கள் பார்த்து கொண்டு தான் இருப்பீர்கள். இருப்பினும் இன்றைக்கான கதை என்ன என்பதை மிகசுருக்கமாக இந்த பதிவில் காணலாம்.
கதிர் ரொம்ப கஷ்டத்துக்கு அப்புறம் சொந்தமா ஒரு ஹோட்டல் ஆரம்பித்தான். அத பாத்து தினமும் பார்வதியும் மல்லியும் நல்லா மட்டம் தட்டுறாங்க. இது வழக்கம் தான! பொதுவாவே ஒருத்தன் சொந்தமா ஏதாவது செய்யணும்னு முயற்சிக்கும் போது அதை கெடுக்குறத்துகுனே இருப்பங்கள்ல அந்த மாறி. ஆனா விட முயற்சியும் உழைப்பும் நம்ம கிட்ட இருந்த கண்டிப்பா ஜெயிப்போம்னு அழகா கொண்டு வந்திருக்காங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்ல.
என்ன தான் நல்லா சமைச்சாலும் லாபம் வர மாட்டேங்கிதுன்னு கதிர் ஒரு யோசனை செய்தான். சாப்பிட வரவாங்க காசு தர வேணாம்னு ஒரு ஐடியா பண்ணாங்க. அது கொஞ்சம் கொஞ்சமா வொர்க் அவுட்டும் ஆச்சு. இன்னைக்கு வியாபாரம் முடிஞ்சதும் எப்பையும் போல மல்லியும் பார்வதியும் கறிச்சு கொட்ட ஆரம்பிச்சாங்க. அப்புறம் அந்த உண்டியல்ல கீழ தூக்கி போட்ட உடனே அங்க இருந்த எல்லாருக்குமே செம்ம ஷாக்.
என்னென்னு பாத்தா சாப்பிட வந்தவங்க எல்லாருமே கதிரோட முயற்சிக்கு அவங்களால முடிந்த தொகைய அதுல போட்டுட்டு போயிருக்காங்க. இத்தனை நாளுல இன்னைக்கு தான் செலவுக்கு மீறி அவங்களுக்கு லாபம் வந்தது. கதிர் முல்லைக்கு சந்தோசம் தாங்கல. ஆனா இதுல மல்லிக்கு மூக்கு உடைஞ்சது தான் நமக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். அங்க இன்னொரு பக்கம் மொத்த குடும்பமும் சொந்தக்காரங்க கல்யாணத்துக்காக கொடைக்கானல் கெளம்பிட்டு இருக்காங்க.
உங்களுக்கு தெறியுமா? இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமம் தொடர்கிறது. அதுனால இந்த வாரம் முழுவதும் இரண்டு குடுபங்களும் கோடைகானலில் தான் கூடுறாங்க. நாம போக முடிலைனாலும் அவங்கள பாத்து ரசிச்சிக்கலாம் வாங்க.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…