இந்திய நடிகர் ஒருவருக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் குவிகிறார்கள் என்றால் சந்தேகமே இன்றி அது ஷாருக்கான்தான் என பலரும் கூறுவார்கள். அவர் யார் என்பதை கடந்த 4 ஆண்டுகளாக தெரியாமல் இருந்தவர்களுக்கு நிரூபிக்கும் வகையில் படம் திரையிடப்படுவதற்கு முன்பே 200 கோடி ரூபாய் வசூலை உறுதிப்படுத்தியுள்ளது.
பதான் படத்தின் புக்கிங் தொடங்கியதுமே சடசடவென டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இப்போது வரை முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்துள்ளதாம். நாளை வெளியாகும் இந்த படம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என இப்போதே பல தியேட்டர்களின் டிக்கெட்கள் தீர்ந்துவிட்டனவாம். அதிலும் குறிப்பாக 30 சதவிகிதம் தென்னிந்திய திரையரங்குகள் என்கிறார்கள்.
இந்த வாரம் இறுதியில் 200 கோடி வசூலை உலகம் முழுவதும் நிகழ்த்தும் சாதனைப் படமாக இந்த பதான் பார்க்கப்படுகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் சேர்ந்து நடித்துள்ள இந்த ஆக்ஷன் படத்தில் பெரிய அளவில் கதை எதுவும் இல்லை என ரசிகர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.
4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானை திரையில் காண்பது தொடங்கி, ஷாருக்கான் - ஜான் ஆப்ரகாம் இணை, தீபிகா படுகோன், சித்தார்த் ஆனந்த் இயக்கம் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தென்னிந்தியாவிலும் கடந்த பொங்கலுக்கு பெரிய பெரிய படங்கள் வெளியாகியிருந்த நிலையில், இந்த வாரம் சொல்லிக்கொள்ளும் வகையில் பெரிய படங்கள் இல்லை என்பதால் நிச்சயம் வேற லெவலில் வசூல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…