உசிலம்பட்டியில் வெளியாகும் அஜித், விஜய் படங்களுக்கு அதிகவிலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 42 ரசிகர்கள் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு, வாரிசு திரைப்படங்களை நாளை ஒரே நாளில் வெளியாக உள்ள நிலையில் இரு தரப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பொன்னுச்சாமி, மலையாண்டி என இரு திரையரங்குகளில் வெளியாகும் அஜித் -ன் துணிவு, விஜய்-ன் வாரிசு திரைப்படத்திற்கான டிக்கெட் அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட அதிகப்படியாக ரூ.500 முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி தேனி ரோட்டில் உள்ள பொன்னுச்சாமி தியேட்டர் முன்பு மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் ரசிகர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக ரசிகர்களான உசிலம்பட்டி நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் சந்திரன் மற்றும் வழக்கறிஞர் சங்கிலி உள்ளிட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…