Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையா ..? கதாநாயகர்கள் கால்ஷீட் பிரச்சனையா..?

Editorial Desk Updated:
பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையா ..? கதாநாயகர்கள் கால்ஷீட் பிரச்சனையா..?Representative Image.

தமிழ் திரையுலகின் மாபெரும் பட்ஜெட்டில் உருவான சரித்திரப் படம் அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" கதை ஆகும். இதை பல தடைகளுக்கு பிறகு  இயக்குனர் மணிரத்தினம் வெற்றிகரமாய்  படமாக எடுத்து முடித்தார். "பொன்னியின் செல்வன்" கதை பெரிய தொடர்கதை  என்பதால் அதனை இருபாகமாக எடுக்க முடிவு செய்த படக்குழு , அதையும் வெற்றிகரமாக எடுத்து முடித்தது.

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் திரையில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வசூல் சாதனைப்  படைத்து உலகளவில் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்ப்பை  பெற்றது.  பொன்னியின் செல்வன் பாகம்-1 ரசிகர்கள் இடையே வரவேற்ப்பை பெற்றதன் மூலம் இரண்டாம் பாகத்தின் ரிலீஸை நோக்கியே கோலிவூட் வட்டாரம் உள்ளது. 

பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையா ..? கதாநாயகர்கள் கால்ஷீட் பிரச்சனையா..?Representative Image

படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையா 

பொன்னியின் செல்வன் படத்தின் பாகம்-2 படக்குழு அடுத்த வருடம் மே மாதத்தில் வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தின் மிகப்பெரிய  வெற்றியைத் தொடர்ந்து  இரண்டாவது பாகத்தில் சில கதாபாத்திரங்களுக்கு புதிய காட்சிகளை  சேர்க்கலாம் என்று இயக்குனர் மணிரத்தினம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய கதாபாத்திரங்களான வந்தியத்தேவன், ஆதித்தியகரிகாலன், அருள்மொழிவர்மன் ஆகியோரின் புதிய காட்சிகளைப்  படமாக்கி இரண்டாவது பாகத்தில் இணைக்கலாம் என்று  இயக்குனர் மணிரத்தினம் நினைத்துள்ளார்.

 

பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையா ..? கதாநாயகர்கள் கால்ஷீட் பிரச்சனையா..?Representative Image

கால்ஷீட் பிரச்சனை

இங்கு தான் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கார்த்தி, விக்ரம் மற்றும் ஜெயம் ரவியிடம் கால்சீட் கேட்டுள்ளனர். ஆனால்.  அனைவருமே ஒரே மாதிரி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறியுள்ளனர். மேலும்,  இந்த கதாபாத்திரத்திற்கென மறுபடியும் தங்கள் தோற்றத்தை மாற்றுவது இயலாத காரியம் என்றும் கூறியுள்ளனர். 

இது பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு சற்று ஏமாற்றமளித்தாலும்  முக்கிய பெண்  கதாபாத்திரமான"நந்தினி" வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் ஒப்புக்கொண்டுள்ளார்.இதனால் நந்தினி கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்புகளும் விரைவில் துவங்கும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்