நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். அவர் கணவர் தினேஷும் ரச்சிதாவும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கூட தன் அப்பா, அம்மா பற்றி மட்டுமே பேசியிருந்தார் ரச்சிதா. கணவர் குறித்து எந்த பேச்சும் பேசவில்லை. அப்போதே பலருக்கும் சந்தேகம் எழுந்திருந்த நிலையில், அவரே ஒப்புக்கொண்டார்.
தனது சம்பாத்யத்தில் வரும் பணத்தை அப்பா, அம்மாக்கு கொடுக்க கூடாது என தனது கணவர் தெரிவித்ததால், ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் விவாகரத்து வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தன் அப்பா, அம்மாவிடமும் தனக்கு எந்த நிலைமை வந்தாலும் நீங்கள் எனக்கு பணம் தரக் கூடாது என்று சொல்லியிருப்பதாகவும் ரச்சிதா தெரிவித்திருந்தார். சரவணன் மீனாட்சி என்ற ஹிட்டான சீரியலில் நடித்து புகழ் பெற்ற நடிகைக்கே இந்த நிலைமை என்றால், துணை நடிகைகளாக நடிக்கும் பலருக்கு அவர்களது வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது என பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…