Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

Raja Rani 2 Today Episode: பொண்ணு பொறந்துடுச்சுன்னு...அர்ச்சனா செய்த காரியம்...செந்திலுக்கு வந்த சந்தேகம்! மாட்டிப்பால?

Priyanka Hochumin October 10, 2022 & 13:15 [IST]
Raja Rani 2 Today Episode: பொண்ணு பொறந்துடுச்சுன்னு...அர்ச்சனா செய்த காரியம்...செந்திலுக்கு வந்த சந்தேகம்! மாட்டிப்பால?Representative Image.

Raja Rani 2 Today Episode: வெற்றிகரமாக போலீஸ் ட்ரெயினிங்காக சென்னை சென்றுள்ளனர் சந்தியா, சரவணன். தன்னுடைய மருமகள் இவ்ளோ பெரிய இடத்தில் இருக்கிறதை நினைத்து பூரித்து போறாங்க மாமனாரும், மாமியாரும்.

Raja Rani 2 Today Episode: பொண்ணு பொறந்துடுச்சுன்னு...அர்ச்சனா செய்த காரியம்...செந்திலுக்கு வந்த சந்தேகம்! மாட்டிப்பால?Representative Image

அப்படி இருக்கும் போது அர்ச்சனாக்கு குழந்தை புறந்துடுச்சுன்னு சரவணனுக்கு போன் வருது. இது தெரிஞ்சதும் நாலு பேரும் ரொம்ப சந்தோஷப்படுறாங்க. நம்ப குடும்பத்துல அடுத்து அடுத்து நல்ல விஷயங்களா நடக்குறது பாத்து சிவகாமி ரொம்ப ஆனந்தமா இருக்காங்க. இருந்தாலும் இப்படி யாருமே இல்லாம இவ்ளோ தூரத்துல வந்து சந்தியா தனியா இருக்க போறத நினைச்சு உள்ளுக்குள்ள அவங்களுக்கு ஒரு பயம். மறுபக்கம் சந்தியா போலீஸ் ஆனதுக்கு அப்புறம் எங்க சரவணன மதிக்காம போய்டுவாங்களோனு ரொம்ப பயம் அவங்களுக்கு.

Raja Rani 2 Today Episode: பொண்ணு பொறந்துடுச்சுன்னு...அர்ச்சனா செய்த காரியம்...செந்திலுக்கு வந்த சந்தேகம்! மாட்டிப்பால?Representative Image

அங்க ஹாஸ்பிடல்ல குழந்தை பொறந்துடுச்சுன்னு அர்ச்சனா ரொம்ப ஆசையோட குழந்தையை பாக்குறாள். பாத்த உடனே தேம்பி தேம்பி அழுக ஆரம்பிச்சிடுறாள். ஏன்னா? அவளுக்கு பிறந்தது பெண் குழந்தையாம். ஆம்பள புள்ள இல்லைன்னு மேடம்கு ரொம்ப வருத்தம். இப்ப வீட்ல நம்மல யாரும் மதிக்க மாட்டாங்க என்ன பன்னலாம்னு அழுதுகிட்டே யோசிக்கிறாள். பக்கத்துலயே அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஆண் குழந்தை பொறந்திருக்கு. அவங்க இன்னும் அவங்களோட குழந்தைய பாக்கவே இல்ல. இந்த அர்ச்சனா உடனே அவளுக்கு  பிறந்த பெண் குழந்தையை மாத்தி அவங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைய தூக்கிட்டு வந்துடுறா. நல்ல வேள யாரும் பாக்கலைனு நிம்மதியா இருக்கிறாள்.

Raja Rani 2 Today Episode: பொண்ணு பொறந்துடுச்சுன்னு...அர்ச்சனா செய்த காரியம்...செந்திலுக்கு வந்த சந்தேகம்! மாட்டிப்பால?Representative Image

நாளை நடக்க போவது குழந்தைய பாக்க வந்த செந்தில் என்னடி அர்ச்சனா குழந்தை உன்ன மாறியும் இல்ல, என்ன மாறியும் இல்லைனு கேக்குறான். பயத்துல என்ன சொல்றதுன்னு தெரியாம நிக்கிறா அர்ச்சனா. என்ன தான் விஞ்ஞானமும் அறிவியலும் வளந்தாலும் இன்னமும் இந்த கால கட்டத்தில் ஆண் வாரிசு நால தான் மரியாதைனு நினைக்கிறது ரொம்ப கொடுமையா இருக்கு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்