தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும் நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்ற நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று, சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்துகொண்டார். கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை 3:30 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். காலை 4 மணிக்கு அவருக்கு பசி எடுத்துள்ளது. அப்போது இட்லி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகுதான் நெஞ்சு வலிக்கிறது என்று கூறியுள்ளார்.
குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அவரது உடல் சென்னை சாலிகிராமத்திலுள்ள இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது. மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிவராத்திரி விழாவுக்காக கர்நாடக மாநிலம் சென்று இன்று சென்னை திரும்பிய ரஜினி காந்த் மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் வைக்கப்பட்ட சாலிகிராமம் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி காந்த என்னை மயில்சாமி சந்திக்கும்போதேல்லம் எம்ஜிஆர், சிவனை பற்றி மட்டுமே பேசுவார் என்றார்.
அவர் மிகப்பெரிய சிவபக்தன் என்றார். மயில்சாமியின் கடைசி ஆசையை பற்றி நான் கேள்வி பட்டேன் இது பற்றி டிரம்ஸ் சிவமனியிடன் நான் பேசுவேன் என்றும் மேகநாதேஸ்வரன் திருக்கோவிலின் சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்வேன் என ரஜினிகாந்த்உறுதி அளித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…