தமிழகத்தில் "சர்தார்" படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக படத்தின் ஹீரோ கார்த்தி செம்ம அப்டேட் தந்துள்ளார்.
இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான படம் தான் சர்தார். இதில் கார்த்தி ஹீரோவாகவும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா போன்ற முன்னணி நடிகர்களுடன் உருவாக்கப்பட்டது. இப்படியாக அனைத்து கலவைகளை கொண்ட இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உளவாளிகள் வாழ்க்கை மற்றும் மாஃபியாக்களை குறித்தும் இயக்கப்பட்ட இந்த படம் கடந்த 5 நாட்களில் ரூ. 50 கோடி வசூலை ஈட்டியுள்ளது. அதனை கொண்டாடும் விதமாக, சென்னையில் வெற்றி விழாவில் பேசிய கார்த்தி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து இரண்டாம் பாகம் உருவாக்கத்தின் வேலைகள் கூடிய விரைவில் தொடங்க உள்ளதாக கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…