நடிகர் சிம்புவின் அடுத்த பட இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தான் என தகவல் வெளியாகியுள்ளது. பலரும் பேசி வரும் நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தைத் தொடர்ந்து இந்த இயக்குநருடன் இணைவார் என கூறப்படுகிறது.
சிம்பு பல்வேறு புதிய இயக்குநர்களோடு இணைவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், சிலரிடம் தனக்காக கதை கேட்டிருப்பதாகவும், சிலர் டெவலப் செய்துகொண்டிருக்கிறார்கள் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில்தான், சிம்பு ஏ ஆர் முருகதாஸுடன் இணைகிறார் என கூறப்படுகிறது.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகவும் நல்ல வியாபாரத்தை செய்திருப்பதால், அடுத்து வரும் பத்து தல படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அந்த படத்தைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படம்தான். முத்துவின் வாழ்க்கையில் அடுத்து என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த படத்தைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது. அடுத்த வருடம் துவக்கத்திலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…