இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணி தனது 96வது வயதில் காலமானர். அதைத்தொடர்ந்து எலிசபெத்தின் மகன் மூன்றாம் சார்லஸ் (76வயது) அதிகாரப்பூர்வ மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், மே 07 ஆம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் சர்ச்சில் முடிசூட்டு விழா நடைபெற்றது.
பிரிட்டனின் 40வது மன்னரை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட நிகழ்வில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். அவர்களில் பாலிவுட் நடிகையான சோனம் கபூரும் கலந்துக் கொண்டார். ஏராளமான மக்களுக்கு மத்தியில் இந்திய முறைப்படி 'நமஸ்தே' என்ற வார்த்தையுடன் தனது உரையைத் தொடங்கிய சோனம் நாடுகளின் பொதுநலம் குறித்தும் உரையாற்றினார்.
சோனம் கபூர் பேசிய அந்த வீடியோவை சோனம் கபூரின் தாயார் சுனிதா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…