மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மறைந்த பாடகர் எஸ்.பி.பி பல்வேறு சினிமா பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பக்தி பாடல்கள் பலவற்றை பாடியுள்ளார். அவ்வாறு இவர் பாடிய திருப்பதி வெங்கடாசலபதி குறித்து இவர் பாடிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. இந்நிலையில் SPB பாடிய கடைசி பக்தி ஆல்பம் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடைசியாக விஸ்வரூப தரிசனம் என்ற கிருஷ்ணரின் புகழ்பாடும் ஆல்பம் பாடலை பாடியுள்ளார். குறிப்பாக மஹாபாரத போரில் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு காட்டிய விஸ்வரூபத்தை பற்றிய பாடலாக அமைந்துள்ளது.பாடகர் ஸ்ரீ ஹரி இதனை தயாரித்துள்ளார், கே.எஸ். ரகுநாதன் இசையமைத்துள்ளார், சிம்பொனி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீ ஹரி கூறுகையில் இந்த பாடல் தயாரிப்பின் ஆரம்பக்கட்டத்திலேயே இதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடவேண்டும் என முடிவு எடுத்திருந்தோம். அப்போது அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போவதற்கு முன்னர், அவரிடம் கேட்ட போது பாடலை கொடுங்கள் நான் பாடி கொடுக்கிறேன் என அவர் கேட்டார், ஆனால் நாங்கள் அப்போது இசை அமைந்திருக்கவில்லை. இருந்தாலும் அவர் பாடலை பாடிக்கொடுத்தார்.
நாங்கள் அப்போது இசையமைக்கவில்லை பின்னர் பாடிக்கொள்ளலாம் என கூறியிருந்தால் தற்போது இந்த பாடல் அவரின் குரலில் நமக்கு கிடைத்திருக்காது,என தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…