சுந்தரி சீரியலின் பரபரப்பான இன்றைய எபிசோடில், எப்போடா கார்த்திக் மாட்டுவாருனு எல்லாரும் எதிர்பார்த்த நேரம். இன்னைக்காவது வருமா.. அனுவுக்கு கார்த்திக் மேல சந்தேகம் வரும்னு பாத்தா, சுந்தரி மேல கோவம் வர மாறி கார்த்திக் பண்ணீட்டாரு. இன்னைக்கு விறுவிறுப்பா களமிறங்கும் சுந்தரி சீரியலில் என்ன நடக்கும்னு பாக்கலாம் வாங்க.
அனுவுக்கும் சுந்தரிக்கும் பிரச்சனையை உண்டாக்க கார்த்தி நினைச்சிட்டு இருந்தாரு. இதுல சுந்தரிக்கு நல்லா தெரிஞ்சிடுச்சி. கார்த்திக் தான் டபுள் கேம் ஆடுறாருனு. செஞ்ச தப்ப ரியலைஸ் பண்ணிப்பானு பாத்தா, தப்புக்கு மேல தப்பு பண்ணிட்டே போறாரு கார்த்திக்.
சுந்தரியோட அம்மா கிட்ட அனு போன் பண்ணி, சுந்தரி எங்க இருக்கானு கேக்றாங்க. ஏன்னா அனுவுக்கு சுந்தரி மேல இருக்க கோவம் இன்னும் கொஞ்சம் கூட குறையல. இதுல சுந்தரியோட அம்மா, அனுகிட்ட நீயும் வீட்டுக்கு வா. இப்போ தான் சுந்தரியோட வீட்டுக்காரரும் அவ கூட வந்தாரு. நீ இன்னும் பாத்ததே இல்லல்ல. வீட்டுக்கு வானு கூப்புடுறாங்க.
இன்னொரு பக்கம் சுந்தரி அனுவோட அம்மா முன்னாடி நின்னு, கார்த்திக்கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்காங்க.. நெக்லஸ நீ எடுத்துட்டு, என்னையும், அனு மேடத்தையும் பிரிக்க பாக்றியா..? அதுக்கு கார்த்திக், நான்லாம் மாத்தி வைக்கக் கிடையாது. நீ தான் மாத்தி குடுத்துருப்பனு சொல்றாரு போல… உடனே சுந்தரிக்கு கோவம் வந்து கார்த்திக்கோட சட்டையபிடிச்சி கேள்வி கேக்குறாங்க.
இதுல அனு, சுந்தரியோட வீட்டுக்குப் போய் பாப்பாங்களா..? இல்ல, சுந்தரி கார்த்திக் ஓட சட்டைய பிடிச்சி நிக்குறது பாப்பாங்களானு பாக்கலாம். ஆனா, எப்படி இருந்தாலும், கார்த்திக் சீக்கிரமா மாட்டிப்பாருனு சொல்றாங்க. இன்னைக்கான பரபரப்பான சுந்தரி சீரியல்ல என்ன நடக்கு வெயிட் பண்ணி பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…