பாலா இயக்கத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா இணைய இருக்கிறார் என்கிற செய்தி வெளியான போதே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. வாடிவாசல் படம் தாமதமான வருத்தத்தில் இருந்த சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை சமாதானமாக நினைத்தனர். ஷூட்டிங் துவங்கி நடைபெற்று வருவது அறிந்ததும் அனைவருக்கும் மகிழ்ச்சி.
ஆனால் ஆனந்தம் அப்படியே நொறுங்கிப் போனது பாலாவின் அறிக்கை வெளியான போது. அரசல் புரசலாக பாலாவுக்கும் சூர்யாவுக்கும் சண்டை, ஷூட்டிங் நிறுத்தம் என பல தகவல்கள் வெளியானாலும் இதை படக்குழு உறுதிப்படுத்தாமலே நீட்டிக் கொண்டிருந்தது.
சில காலம் தாமதமாக படப்பிடிப்பு நடத்தப்படும் என சூர்யா தரப்பிலிருந்தும் அறிக்கை வந்தது. ஆனால் எதிர்பார்த்தது இல்லாததால் படத்தை விட்டு நீங்கும் முடிவுக்கு வந்தார் சூர்யா. படத்தை விட்டு தான் மட்டுமில்லாது பட நிறுவனமும் விலகியது. இந்நிலையில் படம் தொடரராததால் வருத்தத்தில் இருந்த சூர்யா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது.
வணங்கான் படம் நிறுத்தப்பட்டதால், அதற்கு பதிலாக ஹரி இயக்கத்தில் ஒரு குட்டி படத்தில் நடிக்கலாமா என ஆலோசனையில் இருக்கிறாராம் சூர்யா. இதுகுறித்து சூர்யா தரப்பிலிருந்து ஹரிக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளதாம்.
கடைசியாக ஹரி இயக்கிய யானை படம் பெரிய அளவில் வசூல் செய்யாவிட்டாலும்கூட, சூர்யாவும் ஹரியும் இணைந்தால் அது நிச்சயம் ஹிட் என எழுதப்படாத ஒன்று இருக்கிறதே. பரணியில் போட்ட அருவாவைத் தூக்கிட்டு வரப்போறாரு ஹரி. நல்லா தீட்டி ஒரு வீசு வீசுங்க பாக்கலாம்..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…