முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்படும் தாயை இழந்த ரகு, அம்மு என்ற இரு யானைக்குட்டிகளை பாசத்தை காட்டி வளர்த்து வருகிறார்கள் பொம்மன் - பெல்லி இருவரும். யானைக்குட்டிகள் ஏன் ஆதரவற்ற நிலையில் இதுபோன்ற முகாம்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. வயதான பொம்மன்- பெல்லி தம்பதிக்கு இடையிலான காதல், யானைகள் மீது அவர்கள் காட்டும் பாசம். கடைசியில் என்ன ஆகின்றது என்பதை அழகாய் காட்சிப்படுத்தியுள்ளனர்.
காட்டில் அணில் சாப்பிடுவது, ஆந்தை எட்டி பார்க்கும் , ஓணான் படுத்திருக்கும் காட்சி என படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கவரும் வகையில் ஒளிப்பதிவு செய்திருப்பது நம்மை மேற்கொண்டு படத்தை காண ஆர்வத்தை தூண்டுகிறது.
காட்டை மிக அழகான காட்சிகளுடன் சுற்றிக் காட்டுகிறார்கள். யானை ரகுவின் செல்ல சேட்டைகளையும் படமாக்கித் தந்திருக்கிறார்கள். குடிசையிலிருந்து வந்து குளிக்கும் காட்சி, புல் சாப்பிடும் காட்சி என அனைத்தும் நமக்கு அருகிலிருந்து பார்க்கும் உணர்வைத் தருகிறது. இன்னும் பல சுவாரஸ்யமான காட்சிகளும் படத்தில் இருக்கின்றன.
அனைத்தையும் கூறிவிட்டால் நீங்களே கற்பனை செய்துகொண்டு அதனை பார்க்கும் அனுபவத்தை இழந்துவிடுவீர்கள். படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த திரைப்படம் இப்போது ஆஸ்கர் ரேஸில் இருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…