தொடர்ந்து பல பரபரப்பான திருப்பங்களுடன் இருக்கும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் வெற்றிக்கு தெரிய வரும் அதிர்ச்சிகரமான உண்மை. அதிர்ச்சியில் உறைந்துப் போகும் அபி, சங்கரநாராயணன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள்.
பவானியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெற்றி பெயில் கிடைத்து வெளியே வந்துவிட்டார். இருப்பினும் குற்றவாளி யார் என்பதை தெரிந்துகொள்ள தனது தேடுதல் பணியைத் தொடங்குகிறான். பின்பு அடுத்த ஹியரிங் வரும் போது கொலை செய்த கத்தியை கொடுத்து வெற்றி அந்த கொலை பழியை ஏற்றுக்கொள்கிறான். பார்க்கும் அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டாலும் பல திருப்பு முனைகளுடன் தொடரைக் கொண்டு சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கொலையாளியை தேடும் பணியில் தன்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் யாரோ என்பதை தெரிந்துக் கொண்ட வெற்றி ஒவ்வொன்றாக விசாரிக்க ஆரம்பிக்கிறான். அப்படி பார்க்கையில் அன்புக்கும் பவானிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு பற்றி தெரிந்துக் கொண்டான் வெற்றி. சரி கல்யாண வீடியோ பார்த்தால் ஏதாவது தெரியுமா என்று அபி, வெற்றி பார்க்கின்றனர். ஆனால் அதில் அவர்கள் கண்டுபிடித்தது மொய் பணத்தை அபு எடுப்பது தான். அதிலும் சரியாக எதுவும் தெரியவில்லை.
சங்கர நாராயணன் தன்னுடைய நண்பர் ஒருவரின் உதவியோடு சில தடயங்களைக் கண்டு பிடிக்கிறார். அதில் பவானி இறந்த இடத்தில் துணி தயாரிக்கும் கடையில் இருப்பது போல நூல் தென்பட்டுள்ளது என்று கூறுகிறார். மேலும் சில பல தடயங்களைப் பற்றி கேள்விப் பட்ட உடனே வெற்றிக்கு உறுதியாகத் தெரிய வருகிறது தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் அதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்று. உடனே அவனுக்கு கலை மீது சந்தேகம் எழுகிறது. அதைப் பற்றி பேச்சு வார்த்தை நடக்கும் போது, நந்தினி கத்தியை கொண்டு செல்வதை வெற்றி கண்டு பிடிக்கிறான். எதனால் இப்படி செய்தீர்கள் என்று கேட்கும் போது, பவானி கலையை அடித்து துன்புறுத்திய போது அவர் மிகவும் மன வேதனையில் இருந்தார். அதனால் தான் இப்படி செய்தேன் என்று கூறுகிறார்.
இதற்கு பின்னர் வெற்றி என்ன செய்யப்போகிறான், அண்ணிக்காக கொலை பழியை ஏற்றுக்கொள்வான் அல்லது இது உண்மை இல்லை என்று மீண்டும் கொலையாளியை தேடுவானா என்று பொறுத்து இருந்து பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…