Thendral Vanthu Ennai Thodum Today Episode: வெற்றி மீது சுமத்திய பழியை பொய் என்று நிரூபித்து அவனை காப்பாற்றினால் அபி. சங்கரநாராயணன் குலதெய்வ கோவிலில் விசேஷம் என்பதால் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்தது. முக்கியமாக அபி தன் கணவனுடன் வரவேண்டும் என்று ஊர் மக்கள் வலியுறுத்தினர். அபியோ என்னுடைய புருஷனுக்கு தரவேண்டிய மரியாதையை சரியாக கொடுத்து வீட்டுக்கு வந்து கூப்பிடணும்னு கண்டிஷன் போடறாங்க.
அபி இப்படி சொன்னத அபி அம்மா சங்கரநாராயணன் கிட்ட சொல்லும் போது, அவர் எதுவும் சொல்லாம சரி என்ன பண்ணணுமோ பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு. கடையோட கணக்கு வழக்கெல்லாம் வெற்றி கூட பாத்துட்டு இருக்கும் போது, அபி அம்மா போன் பண்றாங்க. அந்த சந்தோசமான விஷயத்தை சொன்னதும் அபிக்கு அவ்ளோ சந்தோசம். பிறகு வெற்றி கிட்ட நாளைக்கு எங்க அப்பா வரும் போது, அவருக்கு சூப்பரா கவனிச்சு மனசுல இடம் பிடிச்சிட்டு. நாளைக்கு எந்த பிரச்சனையும் இருக்க கூடாது. இப்படி ரெண்டு குடும்பமும் கிட்டத்தட்ட ஒன்று சேர நிலைமையில் இருக்காங்க.
இந்த மாறி சந்தோசமா இருக்குற நேரத்தில தான் ஒன்னு வச்சிருப்பாங்களா! ஜட்ஜ் சங்கரநாராயணன் ஒரு கேஸ்ல பணக்கார வீட்டு பையன் குடிச்சிட்டு கார் ஓட்டிட்டு போனதுல 4 பேர கொன்னுட்டாரு. அதுக்கு அவங்க அப்பா ஜட்ஜ் கிட்ட வந்து பேரம் பேசி நல்லா வாங்கி கட்டிட்டு போறாரு. இன்னைக்கு அந்த கேஸ்-க்கு தீர்ப்பு வழங்கிய சங்கரநாராயணன் அந்த பையனுக்கு ஜாமீன் வழங்க முடியாத ஆயுள் தண்டனை என்று தீர்ப்பு தந்துட்டாரு.
அதுல அவரு மேல கோவத்தில் இருக்கும் அந்த பையனோட அப்பா, பரமாவோட அல்லக்கை சேட்டு கிட்ட போய் உதவி கேக்குறாரு. அந்த ஜட்ஜ்ஜ போட்டு தள்ளனும், அப்படி ஒரு ஆளு இருந்தா சொல்லுங்கன்னு கேக்குறாரு. இப்ப இதை வச்சி அபி மற்றும் வெற்றிய பழி வாங்க பரமா காய் நகர்த்துவான்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…