Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57
Exclusive

கொலை செய்ததை ஒப்புக்கொண்ட வெற்றி...திடீர் திருப்பம்...வேதனையில் அபி என்ன செய்யப்போகிறாள்?

Priyanka Hochumin Updated:
கொலை செய்ததை ஒப்புக்கொண்ட வெற்றி...திடீர் திருப்பம்...வேதனையில் அபி என்ன செய்யப்போகிறாள்?Representative Image.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெற்றி பவானியை கொலை செய்ய வில்லை என்று வாதாடி பெயில் கிடைத்தது. ஆனால் வாரத்தின் முடிவில் வெற்றி தான் பவானியை கொலை செய்ததாக கூறுகிறார். பல திருப்பங்கள் நிறைய தொடரில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

கொலை செய்ததை ஒப்புக்கொண்ட வெற்றி...திடீர் திருப்பம்...வேதனையில் அபி என்ன செய்யப்போகிறாள்?Representative Image

வெற்றி தான் பவானியை கொலை செய்ததாக தர்ஷன் அவரைக் கைது செய்தார். ஆனால் அபி வெற்றி அந்த கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பினார். எனவே, தன்னுடைய தந்தை சங்கரநாராயணனை வெற்றிக்காக வாதாடும் படி கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுதலுக்கு இணங்க வெற்றிக்காக வாதாட முடிவு செய்தார். பின்னர் வெற்றியிடம் நடந்ததை கேட்கும் போது வெற்றி அந்த கொலையை செய்யவில்லை என்று அவரும் தீர்மானமாக நம்பினார்.

கொலை செய்ததை ஒப்புக்கொண்ட வெற்றி...திடீர் திருப்பம்...வேதனையில் அபி என்ன செய்யப்போகிறாள்?Representative Image

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது தன்னுடைய வாதத் திறமையால் வெற்றிக்கு பெயில் கிடைத்தது. பின்னர் வெற்றியும் சங்கரநாராயணனும் கொலை செய்தவர் யார் என்ற தேடலைத் துவங்கினர். அப்போது வெற்றி தனியாக செல்லும் போது பூங்காவனம் ஆளுங்களுடன் வெற்றியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதைப் போலவே வெற்றியும் தனியாக வந்து சிக்கிக்கொண்டார். ஆனால் அதனை தர்ஷன் தடுத்து பூங்காவனத்திடம் உண்மைகளை கூறுகிறார். தன்னுடைய தவறை உணர்ந்த பூங்காவனம் அடுத்த நாள் வெற்றியை வீட்டில் சந்தித்து மன்னிப்பு கேட்கிறான். மேலும் எதனால் அவன் பவானியை அடித்தான் என்ற காரணத்தையும் கூறுகிறான்.

கொலை செய்ததை ஒப்புக்கொண்ட வெற்றி...திடீர் திருப்பம்...வேதனையில் அபி என்ன செய்யப்போகிறாள்?Representative Image

இன்றைய எபிசோடில் வெற்றியின் குடும்பத்தினர் நாளை வழக்கு தீர்ப்பு என்னவாக வரும் என்று பேசிக் கொண்டிருக்கையில், வெற்றி யார் அந்த கொலையாளி என்று கண்டுப் பிடித்துவிட்டதாக கூறினான். அனைவரும் யார் யார் என்று கேட்ட பொழுது, நாளை நீதிமன்றத்தில் நானும் மாமாவும் கொலையாளியை கூறுவோம் என்று கூறினான். மேலும் கொலை செய்யப்பட்ட கத்தியை நானே கண்டுபிடித்து விட்டேன் என்றும் தெரிவிக்கிறான். மறுநாள் காலையில் அனைவரும் நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். வழக்கு விசாரணையின் போது வெற்றி திடீரென்று நான் தான் கொலை செய்தேன் என்று கூறிவிட்டான்.

எதனால் வெற்றி இப்படி செய்தான், இதில் ஏதேனும் சூழ்ச்சி உள்ளதா அல்லது நிஜமாகவே வெற்றி தான் கொலை செய்தானா என்பதை தெரிந்துக்கொள்ள அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்