தமிழ் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய "கள்ளிக்காட்டு இதிகாசம்" நாவல் தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து துபாயில் வெளியிடப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து எழுதிய "கள்ளிக்காட்டு இதிகாசம்" நூல் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூலாகும். இந்த நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி நிறுவனம் மொழிபெயர்த்து வருகிறது. அதில் இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம், உருது, ஹிந்தி ஆகிய மொழிகளைத் தொடர்ந்து தற்போது உலக மொழியான ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்துள்ளார்.
இவ்வளவு புகழ்பெற்ற இந்த நூலை ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து துபாயில் உள்ள அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெற்ற ‘ரைஸ்’ மாநாட்டில் வெளியிடப்பட்டது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெற்ற இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் அதனை பெற்றுக்கொண்டனர்.
இப்படி ஒரு சிறப்பான நிகழ்வைப் பற்றி வைரமுத்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் "துபாயில் இருக்கிறேன். உலகப் புகழ்மிக்க அட்லாண்டிஸ் ஓட்டல் RISE சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாடு. கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘The Saga of the Cactus Land’ வெளியிடப்பட்டது; 32 நாட்டார் பெற்றுக்கொண்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…