நடிகர் விஜய் சேதுபதிக்கு அறிமுகம் தேவையில்லை. சூப்பர் டீலக்ஸ், விக்ரம் வேதா, மாஸ்டர் மற்றும் சமீபத்திய விக்ரம் போன்ற படங்களின் மூலம் சினிமாவுக்கு அவரது பங்களிப்பு பார்வையாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும், பாலிவுட்டை பொறுத்தவரை உடன் நடிக்கும் நட்சத்திரங்கள் மூலமே இந்தி பார்வையாளர்கள் தன்னை அங்கீகரிப்பதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஏற்கனவே அறிமுகமாகி விட்டாலும், விரைவில் ராஜ் மற்றும் டிகேயின் க்ரைம்-த்ரில்லர் வெப் சீரிஸான ஃபார்ஸி மூலம் இந்தி ஓடிடியில் அறிமுகமாகிறார். இதில் அவருடன் பிரபல பாலிவுட் நடிகரான ஷாஹித் கபூரும் நடிக்கிறார்.
சமீபத்தில், படக்குழுவினர் மும்பையில் டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினர். இதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "நான் இந்தி ப்ராஜெக்ட் செய்கிறேன் என்று என்னிடம் யார் கேட்டாலும், நான் ஷாஹித்துடன் வேலை செய்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் 'ஓ, ஓகே' என்று மட்டுமே கூறுகிறார்கள்.
நான் ஷாருக்குடன் வேலை செய்கிறேன், நான் கத்ரீனா கைஃப் உடன் வேலை செய்கிறேன் என்று சொல்ல வேண்டும், பிறகு அவர்கள் என்னை மதிக்கிறார்கள். எனவே, அது நான் எந்த கலைஞருடன் வேலை செய்கிறேன் என்பதை பொறுத்தது. ஷாஹித், ஷாருக்கான் மற்றும் கத்ரீனாவுடன் பணிபுரிந்தபோது, அவர்கள் அனைவரும் என்னை சகோதரர்கள் போல் கவனித்துக் கொண்டனர்." என்றார்.
ஃபார்ஸி தவிர விஜய் சேதுபதி தற்போது, ஷாருக்கான் உடன் ஜவான் படத்திலும், கத்ரீனா கைஃப் உடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…