முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக கனமழை பெய்து வருவதையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
முதல்வரின் ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களிடம் நிலவரங்களை கேட்டறிந்ததோடு கண்காணிப்பு அதிகாரிகளிடமும் நிலவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்ததாகவும், செங்கல்பட்டு காஞ்சிபுரம் விழுப்புரம் கடலூர் மாவட்ட தலைவர்களோடு நேரடியாக காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கேட்டறிந்து முதல்வர், உரிய நடவடிக்கைகளும் எடுக்க அறிவுறுத்தியதாக தெரிவித்தார். மாமல்லபுரத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நகர்ந்து கொண்டு வருகிறது. மாமல்லபுரத்தில் பகுதிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து மாநிலம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 121 அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மீனவ கிராம மக்களை நிவாரண முகங்களுக்கு கொண்டு சென்று உரிய உணவு உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள முதலமைச்சரை உத்தரவிட்டுள்ளார். 1936 நிவாரணம் மையங்கள் மாநில முழுவதும் தயார் நிலையில் உள்ளது. இரவு முழுவதும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள்.
மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான உதவிகள் மற்றும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து வழங்குவோம். 2204 பேர் தற்போது வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் இனி தொடர்ந்து மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாமல்லபுரம் முதல் மரக்காணம் வரை தொடர்ந்து நிவாரண முகங்களில் பொதுமக்களை பத்திரப்படுத்தும் வேலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
மிகப்பெரிய பாதிப்பு சென்னைக்கு இருக்காது என எதிர்பார்க்கிறோம். சென்னைக்கு பாதித்தாலும் தயார் நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புயலை அரசு எதிர்கொள்ளும். அணைகளை திறந்து விடும் நிலை தற்போது எங்கும் இல்லை. உரிய முன்னறிவிப்புகள் கொடுத்தே அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…