Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வருவாய் இவ்வளவு கோடியா? 

KANIMOZHI Updated:
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வருவாய் இவ்வளவு கோடியா? Representative Image.

சபரி மலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையில் சுமார் 29 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில்,  222 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

சபரிமலை மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம்16ம் தேதி நடை திறக்கப்பட்டது முன்பதிவு செய்த பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர. சராசரியாக ஒரு நாளைக்கு 70 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு 41 நாளில் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவார். 

 

இந்த ஆண்டு சபரிமலை வருமானம் 222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 ரூபாய் என்றும், இதில் சுமார் 70 கோடியே பத்து லட்சத்து 81 ஆயிரத்து 986 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பக்தர்கள் அதிக அளவு வந்த காரணத்தினால் குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்றோர் முதியோர் என தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

 

இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 7 மணி முதல் 11 மணி வரை அபிஷேகம் நடைபெறும் பிற்பகல் 12 30 மணி முதல் ஒரு மணி வரை மண்டல பூஜை நடைபெறும் தொடர்ந்து ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் இரவு 11 மணிக்கு ஹரிவராசனத்துடன் நடை சாத்தப்படும் மீண்டும் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது.

 

சபரிமலையில் நடைபெற்ற 41 நாள் மண்டல பூஜை சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதுa


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்