முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பில்லியனர் எலோன் மஸ்கின் கீழ் ட்விட்டர் நிறுவனம் வந்துள்ளதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
"ட்விட்டர் இப்போது புத்திசாலித்தனமானவர்களின் கைகளில் உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் நமது நாட்டை உண்மையிலேயே வெறுக்கும் தீவிர இடது பைத்தியக்காரர்கள் மற்றும் வெறி பிடித்தவர்களால் இனி அது இயக்கப்படாது" என்று எலோன் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு, டிரம்ப் கூறியுள்ளார்.
2020 தேர்தலுக்கு பிறகு, டிரம்பின் ட்விட்டர் கணக்கு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் எலான் மஸ்க், டிரம்பை இடைநீக்கம் செய்வது உட்பட குறிப்பிடத்தக்க கணக்கு முடிவுகளுக்குப் பொறுப்பான ட்விட்டரின் நீண்டகால சட்ட, கொள்கை மற்றும் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் விஜய காடே உள்ளிட்ட பல ட்விட்டர் நிர்வாகிகளை நிறுவனத்திலிருந்து நீக்கினார்.
எலோன் மஸ்க் கூறுகையில், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், பரவலான பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கொண்ட உள்ளடக்க மதிப்பாய்வு கவுன்சிலை விரைவில் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணக்குகள் உடனடியாக ட்விட்டரில் மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை என்றாலும், விரைவில் டிரம்ப் மீண்டும் ட்விட்டருக்கு திரும்பும் சூழல் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…