உத்திரபிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை பள்ளி ஆசிரியர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தின் வைஷோலி கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நிகித் குமார். இவர் படிக்கும் அரசு பள்ளியில் தேர்வு தாளில் தவறாக ஒரு சில பதில்களை எழுதியுள்ளார். அதனால் கோபமடைந்த வகுப்பு ஆசிரியர் அஷ்வினி சிங் சிறுவனின் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மயங்கி விழுந்த அச்சிறுவனை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிகிச்சைக்கு ரூ. 40,000/- செலவை ஆசிரியர் ஏற்றுக்கொண்டதாகவும், மேலும் அச்சிறுவனின் பெற்றோர்களிடம் தரக்குறைவாக பேசியுள்ளார். அது மட்டும் இன்றி அவர்களின் சமூகத்தை கூறி இழிவு படுத்தியதாகவும் கூறுகின்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவனம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கு நீதி கேட்டு தலித் அமைப்புகள் நிகழ்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. அப்பகுதியின் காவல் கண்காணிப்பாளர் சாரு நிகம் ஆசிரியர் அஸ்வினி குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் அவரை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த கொடூர செயலை செய்த ஆசிரியரை இடைநீக்கம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…