Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

137 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. மங்களூரில் பரபரப்பு!

Nandhinipriya Ganeshan Updated:
137 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. மங்களூரில் பரபரப்பு!Representative Image.

மங்களூரு சக்தி நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று உணவு சாப்பிட்ட 137 நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய மங்களூர் போலீஸ் கமிஷ்னர், விடுதியில் கெட்டுப்போன உணவுகள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதலே வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிறு வலியால் துடித்த மாணவர்களை இரவு 9 மணியளவில் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் இது குறித்து பெற்றோர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

அதன்பிறகு தகவறிந்துவந்த பெற்றோர்கள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏஜே மருத்துவமனையில் 52 மாணவர்களும், முல்லர் மருத்துவமனையில் 42 மாணவர்களும், கேஎம்சியில் 18 மாணவர்களும், யூனிட்டி மருத்துவமனையில் 14 மாணவர்களும், சிட்டி மருத்துவமனையில் 8 மாணவர்களும், 3 மாணவர்கள் மங்களா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்