Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

திடீர் தீ விபத்து.. 19 பேர் பலியான பரிதாபம்!!

Sekar June 05, 2022 & 11:00 [IST]
திடீர் தீ விபத்து.. 19 பேர் பலியான பரிதாபம்!!Representative Image.

பங்களாதேஷின் துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 19 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர்.

டச்சு-பங்களாதேஷ் கூட்டு நிறுவனமான பிஎம் இன்லேண்ட் கண்டெய்னர் டிப்போவில் நேற்று நள்ளிரவில் இரசாயனங்கள் நிறைந்த கன்டெய்னரில் ஏற்பட்ட வெடிப்புகளைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது. தலைநகர் டாக்காவின் தென்கிழக்கே 216 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்டகாங்கில் இந்த டிப்போ அமைந்துள்ளது.

முன்னதாக இன்று காலையில் ஆறு பேர் இறந்துள்ளனர் என்று அப்பகுதியின் சிவில் சர்ஜன் எலியாஸ் சௌத்ரி தெரிவித்திருந்தார். ஆனால் சாட்டோகிராம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை பின்னர் 15 ஆக உயர்ந்தது என தகவல் வெளியானது.

பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று சவுத்ரி கூறினார். காயமடைந்தவர்களில் பல தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரும் அடங்குவர். எனினும் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தீயணைப்பு சேவை அதிகாரி ஜலால் அகமது தெரிவித்தார்.

சுமார் 5,000 கண்டெய்னர்கள் அந்த டிப்போவில் உள்ளன. டிப்போ ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான பொருட்களைக் கையாளுகிறது மற்றும் நாட்டின் முக்கிய சிட்டகாங் துறைமுகத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்